Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராசிபுரம் ஒன்றியத்தில் தூய்மை பணிக்கு பேட்டரி வாகனம் வழங்கினார்: கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி

ஜுலை 15, 2023 11:16

ராசிபுரம்: ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 20 ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளா்களுக்கு பேட்டரி மூலம் இயங்கக்கூடிய 3 சக்கர வாகனங்களை பயன்பாட்டிற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் வழங்கினார்.

மேலும் நிகழ்ச்சியானது இராசிபுரம் ஒன்றிய குழு தலைவரும், ஒன்றிய கழக செயலாளாருமான கேபி.ஜெகநாதன் முன்னிலையில் மாவட்ட பொருளாளரும், ஒன்றிய குழு உறுப்பினருமான ஏகே.பாலசந்தர், ஒன்றிய குழு துணை தலைவர் சந்திரா சிவக்குமார், அருளரசன், ஒன்றிய பொருளாளர் ரவி (எ) முத்துச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் மேகலா, தனம், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்